75% சதவீதம் ஆந்திர மக்களுக்கே வேலை!

75% சதவீதம் ஆந்திர மக்களுக்கே வேலை!

அமராவதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 75 சதவீதம் ஆந்திர மக்களுக்கே பணி நியமனம் செய்ய சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக பதவியேற்றதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதியான வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து அவர் தற்போது செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, ஆந்திர மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளிலும் 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, வேலைவாய்ப்பில் 75 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் புதிய மசோதா ஒன்று ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்