கொரோனா பரவலை கண்காணிக்க தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மத்திய அரசு மத்திய குழுவை நியமித்துள்ளது. நாடு முழுவதும் 50 மாவட்டங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மாவட்ட வாரியாக அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதார நிபுணர்கள், நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள், மருத்துவமனை அலுவலர்கள் குழுவில் உள்ளனர்.கொரோனா தடுப்பில் அந்தந்த மாநில சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றுவர்.