சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

பக்னடி:

சட்டீஸ்கரில் நக்சல்களுடனா சண்டையில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.

ராஜ்நந்த்கானில் உள்ள பக்னடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டகோட்டா வனப்பகதியில், மாவட்ட அதிரடிப்படை தாக்குதலில் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நக்சல்களுடனான சண்டை நீடித்து வருகிறது என சத்தீஸ்கர் டிஜிபி டி.எம்.அவஸ்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 29ம் தேதி, சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பெண் நக்சல் உள்ளிட்ட 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்