ஓமனில் 6 இந்தியர்கள் பலி

  • In General
  • November 12, 2019
  • 169 Views
ஓமனில் 6 இந்தியர்கள் பலி

மஸ்கட்:

ஓமன் நாட்டில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்தியர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஓமன் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 10ம் தேதி மஸ்கட் நகரில் சீப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதை அறிந்து வருந்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களின் உடலை இந்தியா கொண்டுசெல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்