5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வேறு பள்ளி ஆசியர்கள்

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வேறு பள்ளி ஆசியர்கள்

சென்னை:

பொதுத்தேர்வு நடக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களை கண்காணிக்க வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்திரந்தது. வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் தேர்வுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்வில் முறைகேட்டைத் தவிர்ப்பதற்காக டம்மி ஷீட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்