சென்னை:
தமிழகம் முழுவதும் 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் எனவும், 8ம் வகுப்பு தேர்வு மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ம் வரை நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.