ரூ.550 நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு!

ரூ.550 நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு!

புதுடெல்லி:

சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, ரூ.550 புதிய நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நாணயத்தின் முன்பக்கம் ரூபாய் மதிப்புடன் அசோக சக்ரா சின்னமும், பின்புறம் குரு நானக் தேவ் உருவ படமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாணயம் 44 மி.மீ சுற்றளவில் சில்வர், காப்பர், நிக்கல் மற்றும் ஸிங்க் ஆகிய உலோகங்களின் கலவையாக அச்சடிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 12ம் தேதி குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்