சென்னை:
சென்னையை சேர்ந்தவர் பிரபுதாஸ் என்பவரின் மகன் ரவீந்திரன். இச்சிறுவனுக்கு 3 வயதில் வாயின் கீழ் தாடையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது ரவீந்திரனுக்கு வயது 7 ஆகிறது.
சிறுவனுக்கு வலி அதிகமானதால் அவனை தனியார் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டபோது அவனின் வாயில் சிறுதும் பெரிதுமாக வளர்ச்சியடையாத பற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் மருத்துவர் ரமணி மற்றும் அவருடைய மருத்துவக் குழு, சிறுவன் ரவீந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்து பற்களை அகற்றினர்.