50 ஆண்டுகால விண்கல்..! கலெக்டர் ஆபீசில் ஒப்படைத்த நபர்!!

50 ஆண்டுகால விண்கல்..! கலெக்டர் ஆபீசில் ஒப்படைத்த நபர்!!

கோவை:

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 50 ஆண்டுகால விண்கல்லை வாலிபர் ஒருவர் எடுத்துவந்து ஒப்படைத்தார்.

கோவை, பீளமேடுவைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், 5.9 கிலோ எடையுள்ள கல் ஒன்றை கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்துவந்தார். சுமார் 50 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த இந்த விண்கல்லை புவியியல் துறையில் ஒப்படைத்தார்.

லட்சுமி நாராயணனை முழு சோதனைக்கு பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்