அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கலந்து கொள்கின்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க வேண்டும் எனவும், மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துகொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கட்சிப்பிரச்சனைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசகூடாது என கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்