ஆபாச புகைப்படம்..! மாணவிகளை மிரட்டிய 5 பேர் கைது..!!

ஆபாச புகைப்படம்..! மாணவிகளை மிரட்டிய 5 பேர் கைது..!!

பொள்ளாச்சி:

பள்ளி மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரும் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

சம்மதிக்காத மாணவிகளை, வலுகட்டாயமாக கையை பிடித்து, முத்தம் கொடுப்பது போன்றும், கட்டி அணைத்தவாறும் ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களிலும் பரவவிட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவிகளின் பெற்றோர்களின் புகாரின் பேரில், வழக்குபதிந்த ஆனைமலை போலீசார் அவர்கள் 5 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்