ரூ.5 லட்சம் நிதியுதவி: ஐகோர்ட்

  • In Chennai
  • September 13, 2019
  • 213 Views
ரூ.5 லட்சம் நிதியுதவி: ஐகோர்ட்

சென்னை:

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வழக்கு பதிந்து இன்று விசாரணை நடைபெற்றது.

இதில், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது. தலைமைச் செயலரோ,நகராட்சி நிர்வாக செயலரோ பதில்மனுவில் கூறியது போல் செயல்படவில்லை. விதிமீறலில் ஈடுபட்டவர்கள், விதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரவுமுறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். சுபஸ்ரீ வழக்கின் விசாரணை குறித்து பரங்கிமலை போலீசார், மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்