செல்பி மோகம்; முகத்தில் 40 தையல்

  • In General
  • January 17, 2020
  • 192 Views
செல்பி மோகம்; முகத்தில் 40 தையல்

அர்ஜென்டினா:

அர்ஜென்டினாவில் வளர்ப்பு நாயுடன் செல்பி மோகத்தால் முகத்தில் 40 தையல் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவில் வசிக்கும் லாரா சன்சோன் என்ற இளம்பெண் ஒருவர், தனது தோழியின் வளர்ப்பு நாயுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் லாரா சன்சோனின் முகத்தில் கடித்து குதறியது.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். லாரா சன்சோனுக்கு முகத்தில் 40 தையல் போடப்பட் டுள்ளது.

இதுகுறித்து லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தெ £ட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்