சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமனம் செய்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலராக ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் உள்ள நிலையில் மேலும் 4 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.