புனே:
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.
இந்திய பயணமாக வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகளில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது புனேவில் 3வது போட்டி நடைபெறுகிறது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தநிலையில், இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆடவுள்ளனர்.