லண்டன்:
இங்கிலாந்தில் லாரி கண்டெய்னர் ஒன்றில் 39 உடல்களை கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து எசெக்ஸ் மாகாணத்தின் கிரேஷ் நகரில் தொழில்துறை பூங்காவில் நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் 39 பேரின் உடல்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
உடனடியாக அயர்லாந்தை சேர்ந்த டிரைவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் லண்டன் நகரில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.