இலங்கைக்கு 335 ரன்கள் இலக்காக நிர்ணியித்தது ஆஸி.,!

  • In Sports
  • June 15, 2019
  • 177 Views
இலங்கைக்கு 335 ரன்கள் இலக்காக நிர்ணியித்தது ஆஸி.,!

லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20 லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடைபெறுகிறது. இதில் இலங்கை அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது.

இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153, ஸ்மித் 73 மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 335 ரன்கள் இலக்கா இலங்கை அணி பேட்டிங் செய்துவருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்