கம்மம்:
தெலங்கானாவில் ரூ.2000 போலி நோட்டுக்கள் 320 மூட்டைகள் பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் பொதுமக்களிடம் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து ஏமாற்றும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் 320 மூட்டைகள் போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்தனர். இதில் சுமார் ரூ.6.4 கோடி ரூபாய் அளவுக்கு நோட்டுக்கள் இருந்துள்ள தெரியவந்துள்ளது.
போலி ரூபாய் நோட்டுக்களை 20 சதவீத சலுகையில் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக 5 பேரை கம்மம் போலீசார் பறிமுதல் செய்தனர்.