கேரள நிலச்சரிவில் 30 குடும்பங்களை காணோம்

கேரள நிலச்சரிவில் 30 குடும்பங்களை காணோம்

மலப்புரம்:

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 30 குடும்பங்கள் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் உள்ள காவலப்பராவில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதில் 30 குடும்பங்கள் காணவில்லை என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்த மீட்புக் குழு இன்று அந்த இடத்தை அடைந்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவிலிருந்து இதுவரை 54 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்