புதுச்சேரி:
புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1996லிருந்து 2000ம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ஜானகிராமன் உடல் மரக்காணம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஆலத்தூரில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவையொட்டி புதுச்சேரியில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஜானகிராமன் உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.