3 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்..? தமிழக தேர்தல் ஆணையம் பதில்

3 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்..? தமிழக தேர்தல் ஆணையம் பதில்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவரின் இறப்பை தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது.

ஆண்டின் துவக்கத்தில் திமுக எம்எல்ஏக்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) ஆகியோரும் மரணமடைந்தனர். இந் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் கூறி உள்ளது.இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது குறித்து, வாரம் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவாகவில்லை, ஆனாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்