புனே:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 273 ரன்களை குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 108 ரன்களும், விராட் கோலி 63 ரன்கள், புஜாரா 58 ரன்கள் சேர்த்தனர்.