சென்னை:
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலையோ அல்லது இரவு நேரங்களிலோ லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை- வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.