சவுத்தாம்டன்:
உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி 262 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 31வது லீக் ஆட்டமாக வங்கதேச அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று மோதி வருகிறது.
சவுதாம்டனில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.
இந்நிலையில், 263 ரன்களை இலக்காக்கொண்டு ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. வங்கதேசம் அணியில் அதிகபட்ச ரன்களாக ரஹீம் 87 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தார்.