அசாம்:
அசாம் வெள்ளப்பாதிப்பிலிருந்து இதுவரை 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க சுமார் 380 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 15 குழுகளாக பிரிந்து மாநிலம் முழுவதும் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கடந்த 11ம் தேதி முதல் இன்று வரையிலான, பக்ஸா, மோரிகான், கோலாகாட், கம்ரூப் ஆகிய பகுதிகளிலிருந்து இதுவரை 2,500 பேரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.