இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • July 10, 2019
  • 206 Views
இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு!

மான்செஸ்டர்:

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு இலக்காக 240 ரன்களை நியூசிலாந்து அணி நிர்ணியத்துள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்துவீச்சில் இறங்கியது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில், ஐசிசி உலகக்கோப்பை தொடரின், இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி மழையால் நேற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் தொடர்ந்து மழை நீடித்ததால், இந்த போட்டி இன்று விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 46.1 ஓவரிலிருந்து தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபட்டது நியூசிலாந்து அணி. வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட்டும், 48வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 50வது ஓவரின் முடிவில் 239 ரன்களை எடுத்து 240 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணியத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்