24 நேரமும் கடைகள் திறக்கலாம்; 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு அனுமதி!

24 நேரமும் கடைகள் திறக்கலாம்; 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு அனுமதி!

சென்னை:

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், திரையரங்குகள், வங்கிகள், மருத்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதி ஓராண்டுகாலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் பெண் ஊழியர் நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்