வேலூர்:
வேலூர் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை வருமான வரித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் 11.58 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறையினரின் அறிக்கையை அடுத்து, நடக்கவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில், தற்போது இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட வருமானவரித்துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. இவர் வேலூர் தொகுதிக்கு சென்று, வங்கி பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவற்றையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்கவும், புகார்களை தெரிவிக்க 1800425666 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.