ஜூலை 30 வரை சட்டசபை கூட்டம்..! சபாநாயகர் அறிவிப்பு!!

ஜூலை 30 வரை சட்டசபை கூட்டம்..! சபாநாயகர் அறிவிப்பு!!

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எத்தனை நாட்கள் நடத்துவது குறித்த அலுவல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் சபாநாயகர் தனபால் கூறுகையில், ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். விடுமுறை நாட்கள் போக 23 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்