மும்பை:
மக்களவைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில், வரும் 23ம் தேதி நாடுமுழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பா.ஜ., மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மும்பையின் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளரான கோபால் ஷெட்டி, தேர்தல் வெற்றியை கொண்டாட 2 டன் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார்.
இதற்கான தயாரிப்பு பணிகளில், மோடியின் மாஸ்க் அணிந்து ஊழியர்கள் இனிப்புகளை தயாரித்து வருகின்றனர்.