சென்னை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கனமழையால் விளைச்சல் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால் சாதாரண மக்கள் வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமைச்சர் கூறியதாவது: ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படும்.
மேலும், சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.