திருவனந்தபுரம்:
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை போக்க, கேரளாவிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயார் என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று, திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.