கள்ள காதலனுடன் ஓடிய இளம்பெண்..! உதவிய 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை..!!

கள்ள காதலனுடன் ஓடிய இளம்பெண்..! உதவிய 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை..!!

தார்:

கள்ளக் காதலனுடன் ஓடிய திருமணமான பெண்ணுக்கு உதவிய 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில் திருமணமான பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலனை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், நான் உங்களுடைய வாழ்க்கையில் இருந்து விலகி கொள்கிறேன் எனவும், உங்களை சேர்த்து வைத்துவைத்த பிறகு தொந்தரவு கொடுக்கமாட்டேன் இங்கு வந்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 2 பேரும் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்களுக்கு உதவிய 2 பெண்களும் அங்கு வந்துள்ளனர். ஊருக்குள் வந்த அவர்களை மரத்தில் கட்டிபோட்டு உறவினர்களுடன் சேரந்து அந்த பெண்ணின் கணவர் பிரம்பால் அடித்துள்ளனர்.

மேலும் அந்த ஜோடிகளுக்கு உதவிய இரு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்