திருவண்ணாமலை:
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரரின் 2 மனைவிகளும் பஞ்., தலைவராக வெற்றிவாகை சூடியுள்னர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் மற்றும் வழூர் அகரம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், செல்வியும் போட்டியிட்டனர்.
இவர்கள் இருவருமே முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு,, வெற்றியும் பெற்றுள்ளனர்.
இதனால் பூரிப்புடன் இரண்டு மனைவிகளையும் அழைத்து மாலை சூடி ஊர் முழுவதும் வலம் வந்தார்.