சென்னை:
நடிகர் சந்தானத்தின் 2 புதிய படங்கள் ஜனவரி 31ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘டகால்டி’ மற்றும் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ படமும் இம்மாதம் 31ம் தேதி வெளியாகிறது.
‘டகால்டி’ படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுவரும் நிலையில், இம்மாதம் 31ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக என அதிகாரப்பூவமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனால், சந்தானத்தின் 2 திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.