2 இந்தியர்களுக்கு ‘கொரானா’ பாதிப்பு

  • In General
  • February 12, 2020
  • 233 Views
2 இந்தியர்களுக்கு ‘கொரானா’ பாதிப்பு

ஜப்பான்:

ஜப்பான் நாட்டின் சொகுசு கப்பலில் இந்தியர்கள் 160 பேர் சிக்கித் தவித்துவந்த நிலையில், இருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் துறைமுகத்தில் சுமார் 3700 பேருடன் சொகுசு கப்பலான டயமண்ட் எ க்ஸ்பிரஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 வார காலம் கட்டாய மருத்துவ கண்க £ணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பலில் 160 இந்தியர்கள் இருப்பதாகவும், எங்களுக்கு வைரஸ் தாக்குதல் இல்லை எனவும், அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் உடனடியாக மீட்க வேண்டும் என மேற்கு வங்கத்தை சேர்ந்த பினய் குமார் சர்கார் என்ற சமையலர் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 135 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 65 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியர் இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்