செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமத்தில் லூர்துமாதா கோவிலின் ஆண்டுத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த திருவிழாவையொட்டி, நேற்றிரவு லூர்துமாதாவை அலங்கரிக்கப்பட்ட தேரை மாட்டுவண்டியில் கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.
இந்நிலையில், தேரின் உச்சியிலிருந்த சிலுவை மின்கம்பத்தில் உரசியதால், தேரை இழுத்துச்சென்ற ஜெபராஜ், அன்பரசு ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு காரணம் கிராமத்தில் தாழ்வாக உள்ள மின் கம்பிதான் எனவும், மின் வாரியத்தில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.