அடுத்த இரு தினங்களுக்கு மழை

அடுத்த இரு தினங்களுக்கு மழை

சென்னை:

அடுத்த இரு தினக்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த இரு தினங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், மதுரை, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்