புதுடெல்லி:
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மறைவுக்கு டெல்லியில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மறைவையொட்டி, டெல்லி மாநிலம் முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஷீலா தீட்ஷித்தின் இறுதிச்சடங்கு நாளை நிகாம்போத் காட்டில் நடைபெறும். இதனையொட்டி நாளை காலை 11.30 மணி வரை நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.