சென்னை:
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.