ஓசூர்:
பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காலேகுண்டா பகுதியை சேர்ந்தவர்கள் சதாம் மற்றும் இம்ரான் கான். இவர்கள் இருவரும் ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், சதாம் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.