மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே 17 பேர் பலியாக காரணமாக இருந்த சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூரில், கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, உயிரிழப்புக்கு காரணமான அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், நடூர் பங்களாவின் உரிமையாளரான தொழிலதிபர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.