சொகுசு கப்பலில் சிக்கிய இந்தியர்கள்

  • In General
  • February 10, 2020
  • 230 Views
சொகுசு கப்பலில் சிக்கிய இந்தியர்கள்

ஜப்பான்:

ஜப்பான் நாட்டின் சொகுசு கப்பலில் இந்தியர்கள் 160 பேர் சிக்கித் தவிப்பதாக வீடியோ வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் துறைமுகத்தில் சுமார் 3700 பேருடன் சொகுசு கப்பலான டயமண்ட் எக்ஸ்பிரஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 வார காலம் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பலில் 160 இந்தியர்கள் இருப்பதாகவும், எங்களுக்கு வைரஸ் தாக்குதல் இல்லை எனவும், அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பினய் குமார் சர்கார் என்ற சமையலர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், எங்களிடம் யாரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்யவில்லை. பாதிப்படையாத எங்களை தனியாக பிரித்து காப்பாற்ற வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் யாராவது எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கு ஏதும் நேரும் முன்னர் எங்களை காப்பாற்றுங்கள். மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து எங்களை இங்கிருந்து பிரித்து காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்