இண்டூர்:
இலங்கைக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயத்துள்ளது.
இண்டூரில் நடக்கும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பெரேரா 34 ரன்களை எடுத்துள்ளார்.
பும்ரா 32 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், எஸ்.என்.தாகூர் 23 ரரன்களுக்கு 3 விக்கெட்டுகளும், சைனி 18 ரன்களுக்க 2 விக்கெட்டுகளும், சுந்தர் 29 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், குல்தீப் யாதவ் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.