ஜார்குடா:
ஒடிசாவில் ரூ.4.99 கோடி மதிப்பு தங்க பிஸ்கட்டுகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலம் ஜார்குடா ரயில்நிலையத்தில் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இருவரிடமிருந்து 12.932 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.4.99 கோடியாகும். கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் புவனேஸ்வர் டிஆர்ஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.