ஒசூர்:
ஒசூர் அருகே, 110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில், இன்று 110 வயதான மூதாட்டி வாக்களித்தார்.
ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரகாரம் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
மூதறிஞர் இராஜஜி பிறந்து வளர்ந்த ஊரான தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில், இராஜாஜியின் நினைவு இல்லம் அருகில் இருப்பவர் 110 வயதான மூதாட்டி எல்லம்மா, தள்ளும் வயதிலும் இன்று அவர் தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களிப்பதை சிலர் வீண் என்றும், நேரம் செலவாகும் என பேசுவோர் மத்தியில் 110 வயது மூதாட்டி வாக்களித்திருப்பது மற்றவர்களுக்கான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.