103 இந்தியர்கள் டெல்லி வருகை

103 இந்தியர்கள் டெல்லி வருகை

புதுடெல்லி:

சீனாவில் இருந்த 324 இந்தியர்களில் 103 பேர் இன்று டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக ‘கொரானா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், சீனாவின் வுஹான் நகரமே முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வுஹான் சிட்டியில் சுமார் 324 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக வந்த தகவலையடுத்து, இந்திய அரசு ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சீனாவுக்கு சென்ற இந்திய விமானம், 103 இந்தியர்களை மீட்டு இன்று டெல்லி விமான நிலையத்துக்கு வ ந்திறங்கியுள்ளது.

இன்று டெல்லி வந்த விமானத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு சோதனை மையம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்