ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இதனால் சமூக வலைதளம் மூலம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட அவர், கட்டண தொகையாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக ஒருவர் உறுதியளித்துள்ளார். மேலும், அவரிடமிருந்து ரூ.70 லட்சத்துக்கும் அதிகமாக பணத்தை வாங்கியுள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர், மிகவும் மன உளைச்சலால் கொல்கத்தாவுக்கு சென்றுள்ளார்.
இது பற்றி அவரது பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் மீட்டு அந்த அளைஞரை தமிழகம் அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சரவணக்குமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்துள்ளது.
தனையடுத்து தயாரிப்பாளர் சரவணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.