ஓசூர் அருகே கஞ்சா விற்பனை : இருவர் கைது, கெலமங்கலம் போலீஸார் அதிரடி

ஓசூர் அடுத்து யூ. புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 60க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து கெலமங்கலம் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைப்பெற்று வருவதாக உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனுக்கு புகார்கள் வந்தன.

புகாரின்பேரில், கெலமங்கலம் போலீசார் யூ. புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தநிலையில், கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக கஞ்சா விற்பனை செய்துவந்த ராஜப்பா மற்றும் நரயாணப்பா ஆகிய இருவர் அப்பகுதியில் சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததையொட்டி ,அவர்கள் இருவரையும் சுற்று வளைத்து பிடித்த கெலமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்த ராஜப்பா மற்றும் நரயாணப்பா விற்பனைக்காக வைத்திருந்த அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்