ஒசூர், சூளகிரி ஒனறிய துப்புரவு பணியாளர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கேபி.முனுசாமி உணவு பொருட்களை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் சூளகிரி ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கேபி முனுசாமி அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்க ஊரடங்கில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளநிலையில்,
சுகாதார பணியாளர்களும், காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் விடுப்பில்லாமல் பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 100 கணக்கான துப்புரவு பணியாளர்களுக்கும், ஒசூர் ஒன்றியத்தில் உள்ள தூயுமை பணியாளர்களுக்கும் என தனித்தனியாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கேபி.முனுசாமி அரிசி, மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை சமூக இடைவெளி கடைபிடித்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒசூர் சேர்மன் சசி, சூளகிரி சேர்மன் லாவண்யா ஆகியோர் பங்கேற்றனர்